Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, June 15, 2013

    31 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலி: மாணவர் சேர்க்கை பாதிப்பு

    தமிழகத்தில், 31 அரசு கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாக பணிகள் முடங்கியுள்ளதோடு, மாணவர் சேர்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    தமிழகத்தில், 62 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. மொத்தமுள்ள, 69 அரசு கல்லூரிகளில் வழங்கப்படும் இளங்கலை, முதுகலை, எம்.பில்., - பி.எச்டி., படிப்புகளை கொண்டு, கிரேடு-1 கல்லூரிகள் என்றும், கிரேடு-2 கல்லூரிகள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 32 கல்லூரிகள், கிரேடு-1 தகுதியையும், 37 கல்லூரிகள், கிரேடு-2 தகுதியையும் பெற்றுள்ளன.

    இந்நிலையில், கிரேடு -1 தகுதியுள்ள, 32 கல்லூரிகளில், 20 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கிரேடு - 2 கல்லூரிகளில், 11 கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தமுள்ள, 69 முதல்வர் பணியிடங்களில், 31 பணியிடங்கள் காலியாக உள்ளதால், நிர்வாக பணிகள், பெரிதளவு முடங்கியுள்ளதாக பேராசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    முதல்வர் பணியிடங்களை நிரப்புவதற்கான கோப்புகள், உயர்கல்வி துறையில் நீண்ட காலமாக தேங்கி இருப்பதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க செயலர் பிரதாபன் கூறியதாவது:

    அரசு கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக வைத்திருப்பதால், கல்வி மற்றும் நிர்வாக பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பொறுப்பு முதல்வர்கள், நிலைமையை பெருமளவு சமாளித்து வருகின்றனர். தற்போது முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பான எந்த ஒரு முடிவையும், பொறுப்பு முதல்வர்களால், தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. கல்லூரி பணிகள் குறித்த, ஒவ்வொரு முடிவும் எடுக்க, நிர்வாக குழுவிடம் அனுமதி பெற வேண்டிய உள்ளது. அதனால், நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. முதல்வர் பணியிடங்களை, கல்லூரி திறப்பதற்கு முன் அரசு நிரப்ப வேண்டும். இவ்வாறு பிரதாபன் கூறினார்.

    No comments: