Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, June 9, 2013

    வெளிநாட்டில் கல்வி கற்க நுழைவுத்தேர்வு: 3 ஆண்டுகளில் 20% உயர்வு

    வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த, மூன்றாண்டுகளில், 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    நல்ல வாழ்க்கை, அதிக சம்பளம் உள்ளிட்ட காரணங்களால், வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் கல்வி கற்க, "சாட், டோபல்", ஐ.இ.எல்.டி.எஸ்., உள்ளிட்ட நுழைவு தேர்வுகளை எழுத வேண்டும்.

    இத்தேர்வுகளில் ஆங்கிலம், கணிதம் பாடங்கள் அடிப்படையில், கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் வெற்றி பெறும் மாணவர்களே, வெளிநாடு சென்று கல்வி கற்கும் வாய்ப்பை பெறுகின்றனர். மாணவர்கள் வெளிநாடு செல்ல, பெற்றோரும் ஆர்வம் காட்டுவதால், கடந்த, மூன்றாண்டுகளில், வெளிநாடு சென்று படிப்பதற்கான நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

    வெளிநாடுகளுக்கு, இளங்கலை படிப்பிற்காக செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை விட, முதுகலை படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். கடந்தாண்டு இளங்கலை படிப்பில், 15 ஆயிரம் மாணவர்களும், முதுகலை படிப்பில், 80 ஆயிரம் மாணவர்களும் வெளிநாடுகளுக்கு சென்றனர்.

    இதுகுறித்து, "டைம்" பயிற்சி மைய துணை மேலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை, பெரும்பாலும் அமெரிக்காவுக்கே அதிக மாணவர்கள் படிக்க செல்கின்றனர். அதற்கடுத்து ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளை தேர்ந்தெடுக்கின்றனர்.

    இளங்கலை படிப்புக்கு, 50-60 லட்சம் ரூபாய் வரையிலும், முதுகலை படிப்புக்கு, 15-40 லட்சம் ரூபாய் வரையிலும் செலவாகிறது. இத்தொகை, கல்வி நிறுவனங்களை பொறுத்து மாறுபடும். வெளிநாடுகளில் அளிக்கப்படும் இளங்கலையின் கல்வி தரம், நம் நாட்டின் கல்வி தரத்தை ஒப்பிடும்போது, மிகவும் குறைவாகவே உள்ளது.

    வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்கள், பெரும்பாலும் அங்கேயே வேலைவாய்ப்பை பெற்று தங்கி விடுகின்றனர். 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே, படித்துவிட்டு திரும்பி வருகின்றனர். நுழைவு தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்தும் மையங்களின் எண்ணிக்கையும், தமிழகத்தை பொறுத்தவரை, மிக குறைந்த அளவிலேயே உள்ளது.

    கிராமப் புறங்களில், இந்த மையங்களின் எண்ணிக்கை, சொற்ப அளவிலேயே உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, 100 மையங்களும், சென்னையில், 30க்கும் உட்பட்ட மையங்களும் உள்ளன. இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.

    No comments: