Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, June 1, 2013

    மாநில அளவில் 2-வது இடம் பெற்ற ஆத்தூர் அரசு பள்ளி மாணவி தேவிஸ்ரீ

    வறுமையிலும் ஆத்தூர் மாணவி தேவிஸ்ரீ நன்றாக படித்து மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்று சாதனை படைத்து உள்ளார்.எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 52 மாணவ-மாணவிகள் மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்று உள்ளனர். இதில் 51 பேர் தனியார் பள்ளியில் படித்தவர்கள். ஒரே ஒரு மாணவி மட்டும் அரசு பள்ளியில் படித்தவர். அவரது பெயர் தேவிஸ்ரீ.

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்தவர். இவர் 500-க்கு 497 மதிப்பெண் பெற்று உள்ளார். இவரது தந்தை மாதேஸ்வரன் இறந்து விட்டார். தாயார் உமா மகேஸ்வரி ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஸ்கேன் சென்டரில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தாத்தா-பாட்டி வீட்டில் தங்கி இருந்து படித்தார்.

    இவர்களது குடும்பம் வறுமையில் வாடினாலும் சாதனை படைக்க வேண்டும் என்ற வெறியில் படித்ததால் மாநில அளவில் இரண்டாவது இடத்தை பிடிக்க முடிந்ததாக மாணவி தேவிஸ்ரீ கூறினார். டாக்டருக்கு படித்து சேவை செய்வேன் என்றும் அவர் கூறினார்.

    No comments: