Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 6, 2013

    10ம் வகுப்பு உடனடித்தேர்வு: மாணவ, மாணவியர் அவதி

    பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வுக்கு, இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள் என்ற நிலையில், இணைய தளம் முடங்கியது. இதனால், பதிவு செய்ய முடியாமல், மாணவ, மாணவியர், கடும் அவதிப்பட்டனர்.
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த ஒரு லட்சம் மாணவ, மாணவியர், விரைவில் துவங்க உள்ள உடனடித் தேர்வை எழுத உள்ளனர். இதற்காக, www.dge.tn.nic.in என்ற தேர்வுத்துறை இணையதளம் வழியாக, 3ம் தேதி முதல், 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

    இறுதி நாளான நேற்று, ஏராளமான மாணவ, மாணவியர், இணைய தளத்தை பயன்படுத்த முயற்சித்ததால், இணைய தளம் முடங்கியது. காலையில் இருந்து, மாலை வரை, இணையதளத்தை பயன்படுத்த முடியாமல், மாணவ, மாணவியர், கடும் அவதிப்பட்டனர். இதனால், பல ஆயிரக்கணக்கான மாணவர்களால், தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

    இந்த பிரச்னை, தேர்வுத்துறையின் கவனத்திற்கு, நேற்றே கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கிராமத்து மாணவர்கள் நகர் பகுதிக்கு வந்து விண்ணப்பிப்பதற்குள் நேரம் முடிவடைந்து விடும். எனவே கூடுதலாக இரண்டு நாட்கள் அதிகரித்தால் தான் மாணவர்கள் முழுமையாக விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படும்.

    No comments: