Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 6, 2012

    பொதுத் தேர்வு மதிப்பெண்களே வாழ்க்கையை தீர்மானிக்கும்

    தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே, வாழ்க்கையைத் தீர்மானிக்கும்" என தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பேராசிரியர் கண்ணன் கூறினார்.
    தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, அறிவுரை வழங்கியும், உற்சாகப்படுத்தியும் பேராசிரியர் கண்ணன் பேசியதாவது:

    ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு மாணவர்கள், அலைகடலென குவிந்துள்ளனர். இது, கல்வி திருவிழாவாக இங்கு நடக்கிறது. உள்ளே வரும் மாணவர்கள், வெளியே சொல்லும் போது, அதிக மதிப்பெண் பெறும் வித்தையை, கற்று செல்வர். தேர்வு எழுதும் மாணவர்கள், திட்டமிட்டு படிக்க வேண்டும்.

    வாழ்க்கையில் முன்னேற திட்டமிடுதல் அவசியம். உங்கள் இலக்கு எது என்பதை, முதலில் முடிவு செய்யுங்கள். அப்போது தான் இலக்கை நோக்கி, சரியாக பயணம் செய்ய முடியும்; வெற்றியின் உச்சத்தையும் அடைய முடியும். மாணவர்கள் பாடங்களை கஷ்டப்பட்டு படிக்காமல், இஷ்டப்பட்டு படிக்க வேண்டும்.

    90 நாள்கள் மட்டுமே, இந்த கடினமான உழைப்பு என்பதால், ஒவ்வொரு மணி நேரத்தையும், பொன்னான நேரமாக எண்ணி பயன்படுத்த வேண்டும். எந்த பாடத்தில் குறைவாக மதிப்பெண் எடுக்கிறோமோ, அந்த பாடத்தில் அதிக கவனம் செலுத்தி, படிக்க வேண்டும். கணித சூத்திரங்ளை தினமும் எழுதி பார்க்க வேண்டும்.

    தேர்வு நேரங்களில், "டிவி", திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். போன காலங்கள் திரும்ப வராது. எனவே, இருக்கும் நாட்கள் முழுவதையும், படிப்பிற்காக பயன்படுத்த முன்வர வேண்டும். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனைகள், குறிப்புகள் கவனத்தில் கொண்டு படித்தால், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே, உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும். இவ்வாறு, கண்ணன் பேசினார்.


    No comments: