Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, December 25, 2012

    8ம் வகுப்பு தனித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜனவரியில் சான்றிதழ்

    பள்ளியில் முறையாக கல்வி கற்காமல் நேரடியாக 8ம் வகுப்பு எழுதுவோருக்கு "இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம்" பொருந்தாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
    ஓட்டுனர் உரிமம் வேண்டுபவர்கள், ரயில்வே துறையில், அலுவலகங்களில் உதவியாளர் வேலைக்கு செல்பவர்கள் என அனைவருக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாக கருதப்படுகிறது. இத் தேர்வெழுத வயது வரம்பு இல்லாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 30 வயதிலும் இத்தேர்வை எழுதுகின்றனர்.

    "இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம்" நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதன்படி பள்ளிகளில் முறையாக பயிலும் மாணவர்களை மட்டுமே 8ம் வகுப்பு வரை தோல்வியடைய செய்யக் கூடாது என தேர்வுத்துறை அறிவித்தது.

    இந்த புதிய திட்டம் கடந்த ஏப்ரலில் நடந்த, நேரடி எட்டாம் வகுப்பு தனித்தேர்வில் தேர்வுத்துறை அமல்படுத்தியுள்ளது. இந்த தேர்வில் 22.62 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

    No comments: