Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 26, 2012

    3ம் பருவ பாடப்புத்தகங்கள் விடுமுறைக்கு பின் வழங்கப்படும்

    ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தபின், மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, மூன்று பருவமாக பிரிக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படுகிறது. இரண்டாம் பருவத் தேர்வு, தற்போது நடந்து வருகிறது. மூன்றாம் பருவம், ஜனவரி மாதம் துவங்குகிறது. அதற்குரிய பாடப்புத்தகம், அந்தந்த மாவட்டத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில், ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்வதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டது.

    "அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தபின், பள்ளித் துவங்கியதும், அந்தந்த பள்ளிக்கு தேவையான புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டு, மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்படும்" என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments: