Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 27, 2012

    பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு 5.3 லட்சம் இலவச லேப்-டாப் விநியோகம்

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த 5.3 லட்சம் மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் விநியோகிக்கப்பட்டு விட்டதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
    பிளஸ் 2 மாணவர்களுக்கான லேப்-டாப் விநியோகம் கடந்த மே மாதம் தொடங்கியது. தொடர்ந்து 6 மாதங்களாக பள்ளிகளின் மூலமாக நடைபெற்று வந்த இந்த விநியோகம் சில தினங்களுக்கு முன் முடிவடைந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் படிக்கும் மாணவர்கள் என மொத்தமாக 9.1 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால், தாய்லாந்து நாட்டில் ஹார்டு டிஸ்க் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து, லேப்-டாப் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. சற்று தாமதமானாலும் அனைவருக்கும் லேப்-டாப் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும், அதன்பிறகு பிளஸ் 2 மாணவர்களுக்கும் லேப்-டாப் விநியோகம் தொடங்கியது.

    மொத்தம் 5.3 லட்சம் பேருக்கு லேப்-டாப் வழங்க வேண்டும். ஜூன் மாதத்துக்குள் அனைவருக்கும் வழங்குவது சாத்தியமில்லை என்பதால் இதுதொடர்பான முத்திரை பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் இடப்பட்டது.

    அதனடிப்படையில் பள்ளிகளின் வாயிலாக லேப்-டாப் விநியோகம் நடைபெற்று வந்தது. இப்போது அனைத்து மாணவர்களுக்கும் லேப்-டாப் விநியோகிக்கப் பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, கல்லூரிகளில் கடந்த வருடம் முதலாண்டு படித்தவர்களுக்கும், இப்போது இரண்டாமாண்டுக்கு வந்துள்ள மாணவர்களுக்கான லேப்-டாப் விநியோகமும் தொடங்கியுள்ளது. ஒருசில வாரங்களில் இவர்களுக்கான லேப்-டாப் விநியோகமும் நிறைவடையும் என்று தெரிகிறது. அதன் பிறகு இந்த ஆண்டு மாணவர்களுக்கான லேப்-டாப் விநியோகத்துக்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    No comments: