Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, December 29, 2012

    புதன்கிழமைகளில் கதர் ஆடை அணிங்க! அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

    கேரள மாநில அரசு ஊழியர்கள், இனி, புதன் கிழமைகளில், கதர் ஆடை அணிந்து தான், அலுவலகத்துக்கு வர வேண்டும்' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான, கூட்டணி ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின், உம்மன் சாண்டி, முதல்வராக உள்ளார்.இந்நிலையில், கேரள மாநில அரசு, நேற்று வெளியிட்ட அறிக்கை:
    கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், அனைத்து துறைகளிலும், பணியாற்றும் ஊழியர்கள், புதன் கிழமைகளில், கதர் மற்றும் கைத்தறி உடைகளைத் தான், அணிந்து வர வேண்டும்.அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், இந்த உத்தரவு பொருந்தும். மாநிலத்தில், கதர் மற்றும் கைத்தறித் துறையை, ஊக்கப்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.முதல்வர் உம்மன் சாண்டி பரிந்துரையின்படி, கூட்டுறவுத் துறை அமைச்சர், சி.என்.பாலகிருஷ்ணன், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். புத்தாண்டு முதல், இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

    இவ்வாறு, அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய இடதுசாரி ஆட்சி காலத்திலும், கேரளாவில், இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த உத்தரவு, தீவிமாக அமல்படுத்தப் படவில்லை.

    No comments: