Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, December 28, 2012

    எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலையில் இலவச சிற்றுண்டி

    சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை வேளைகளில் இலவச சிற்றுண்டி வழங்க மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளன.

    சிறப்பு வகுப்புகள் மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை 2 மாதங்களுக்கு நடைபெறும். அவ்வகுப்புகளின்போது மாணவர்களுக்கு சிற்றுண்டியாக சுண்டல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 60 நாள்களுக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு 50 நாள்களுக்கும் இலவச சிற்றுண்டி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 631 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், 6 ஆயிரத்து 754 பிளஸ் 2 மாணவர்களுக்கும் வாரத்தின் 6 நாள்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    ஜனவரி முதல் வாரத்திலிருந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஒரு மாணவனுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.80 வீதம் செலவிடப்படுகிறது. 2 மாதங்களுக்கான மொத்த செலவினம் 25 லட்சத்து 63 ஆயிரத்து 568 ரூபாய். மாநகராட்சி சார்பில் கல்வி தர மேம்பாடு சிறப்பு வகுப்பு செலவுகளின் கீழ் இதனை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

    No comments: