Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, December 22, 2012

    ஒரு பள்ளி , ஓர் ஆசிரியர் , 120 மாணவர்கள் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சேந்தமங்கலம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும்
    ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும் கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என கடந்த 5 ஆண்டு காலமாக இக்கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    மேலும் பள்ளிக்கு அருகில் முள்புதர்கள் இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் பள்ளிக்கு வருவதால் மாணவர்கள் அச்சப்படுவதாகவும் இதைக் கண்டித்தும், மாணவர்களின் கல்வித்தரம் பாதிப்படையாமல் இருக்க ஆதிதிராவிடர் நலப்பள்ளிக்கு கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி நேற்று காலை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியின்
    அனைத்து வகுப்பு அறைகளையும் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை தாசில்தார் மார்கபந்து மற்றும் போலிசார் பெற்றோர்களிடம் பேச்சு நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மீண்டும் வகுப்பு நடைபெற்றது.

    No comments: