Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, December 25, 2012

    ஆசிரியர் பயிற்சி முடித்து, 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

    ஆசிரியர் பணிமுடித்து 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
    இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் பூசைதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

    முதல்–அமைச்சருக்கு நன்றி

    தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சுமார் 21 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்து, நேரடி பார்வையின் மூலம் பணி நியமன ஆணையை வழங்கிய தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    இன்று பல ஆயிரம் ஆசிரியர்கள் பி.எட், முடித்து விட்டு தனியார் பள்ளிகளில் 40 முதல் 45 வயது கடந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு வயதின் அடிப்படையில் கருணை காட்ட வேண்டும். இவர்களுக்கு 50 சதவீதம் வேலை வாய்ப்பு பதிவு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும்.

    ஆசிரியர் தகுதி தேர்வில் மத்திய அரசின் விதியை பின்பற்றி எஸ்.சி., எஸ்.டி. ஆசிரியர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்கள் சலுகை அளிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் அருந்ததியினருக்கு எஸ்.சி., எஸ்.டி. அமைப்பில் உட்பிரிவு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்.

    பதிவு மூப்பு

    ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 50 சதவீதமும், வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் 50 சதவீதமும் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். 30 வயது வரை உள்ளவர்களை ஆசிரியர் தகுதி தேர்வு மூலமும், 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

    1 comment:

    Anonymous said...

    Sir please don't bring the policy of kalaignar, We the Tamilnadu people elected Amma with a great majority. Therefore she knows what is good and what is bad for us. Amma says, to bring perfect state with perfect education which is done only through TNTET. If you want seniority wait for Kalaignar Aatchi.