மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம்
விண்ணப்பங்களை அச்சடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை
எடுத்துள்ளது.
விண்ணப்பத்தின் விலை ரூ.50 -ம்,தேர்வுக் கட்டணம் - ரூ.500 -ம்
நிர்ணயிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என இரு பிரிவினருக்கு
தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு பிரிவினருக்கும் தலா 150 மதிப்பெண்களுக்கு
பதில் தேர்வு செய்யும் முறையில் தேர்வு நடத்தப்படும்.
தமிழ், ஆங்கிலம், உளவியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய
ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், ஒவ்வொன்றில் இருந்தும் தலா
30 மதிப்பெண்கள் வீதம், 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களாக,
90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டங்களுக்கு,
தமிழக அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
இந்த வாரத்திற்குள் ஒப்புதல் கிடைத்துவிடும் எனக் கூறப்படுகிறது.
அனுமதி கிடைத்ததும் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என எதிர்ப்பர்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment