Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 4, 2017

    பள்ளிகளில் ஹைடெக் மாற்றம் ரூ.300 கோடியில் அதிரடி திட்டம்

    கேரள மாநில அரசின், கல்வித்துறை சார்பில், செயல்படுத்தப்படும், கேரள மாநில கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திட்டத்துக்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், லேப் - டாப், மல்டிமீடியா புரொஜக்டர்களை வாங்க, இணையவழி, 'டெண்டர்' எனப்படும், ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.


    கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், மார்க். கம்யூ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலம் முழுவதும், 4,775 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பறைக்கும், லேப் - டாப், மல்டிமீடியா புரொஜக்டர், மின்னணுவியல் வெண்பலகை, ஒலிக்கருவிகள் வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது.

    இது, கேரள மாநில அரசின், கல்வித்துறை சார்பில், கே.ஐ.டி.இ., எனப்படும், கேரள மாநில கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. 

    இதற்காக, 300 கோடி ரூபாய் மதிப்பில், 60 ஆயிரத்து, 250 லேப் - டாப்கள், 43 ஆயிரத்து, 750 மல்டிமீடியா புரொஜக்டர்கள் பெறுவதற்கு, கேரள அரசின் இணையதளத்தில், 'டெண்டர்' அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த டெண்டர் மூலம், யு.பி.எஸ்.,கள், ஹெச்.டி., திறன் கேமராக்கள், எல்.சி.டி., &'டிவி&'க்களும் வாங்கப்பட உள்ளன. இவை, பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப, தகவல் தொடர்பு ஆய்வுக்கூடம் அமைக்க பயன்படுத்தப்படும்.

    கல்வித்துறைக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    No comments: