Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, September 2, 2016

    11வது புத்தகக் கண்காட்சி மதுரையில் இன்று துவக்கம் : செப்.12 வரை நடக்கிறது

    மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில், 11வது புத்தகக் கண்காட்சி இன்று (செப்., 2) துவங்கி, 12ம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது. மொத்தம், 250 ஸ்டால்களில் ஐந்து லட்சம் தலைப்புகளில், புத்தகங்கள் இடம் பெறுகின்றன. நாடு முழுவதும் உள்ள பதிப்பாளர்களின் புத்தகங்கள் மற்றும் மாணவர், சிறுவர்களுக்கான புத்தகங்கள் கிடைக்கும். தினமும் மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கண்காட்சி, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும்; அனுமதி இலவசம்.


    'பபாசி' செயலர் புகழேந்தி கூறியதாவது: கடந்த புத்தகக் கண் காட்சியை 10 லட்சம் பேர் பார்வையிட்டனர். இந்த ஆண்டு கூடுதலாக பார்வையாளர்கள் வரலாம். கடந்த முறை மூன்று கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றன. இந்த ஆண்டும் கூடுதலாக விற்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் திறமையை வெளிக்கொணர பேச்சு, கட்டுரைப் போட்டி நடத்தி பரிசு வழங்கப்படும்.புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் வழங்கப்படும். மாணவர்கள் பார்வையிட, கல்வி அதிகாரிகளை கேட்டு உள்ளோம். சிட்டி யூனியன் வங்கியின் தானியங்கி பணம் எடுக்கும் வசதி, குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறையினரிடம் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. ஈரோடு, கோவை என அடுத்தடுத்து கண்காட்சி நடத்திய போதும், வாசகர்களின் எண்ணிக்கை குறையவில்லை. சென்னை, கோவை, மதுரையில் 'பபாசி' சார்பிலும், மற்ற இடங்களில் தனியாருடன் இணைந்தும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது என்றார். சர்வோதய இலக்கியப் பண்ணை நிர்வாகி புருசோத்தமன், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    No comments: