Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, September 23, 2016

    தனியார் மருத்துவ கல்லூரிகள் ’கவுன்சிலிங்’ நடத்த முடியாது’!

    மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு, மாநில அரசுகள் மட்டுமே கவுன்சிலிங் நடத்த முடியும்; தனியார் கல்லுாரிகள், பல்கலைகள், கவுன்சிலிங் நடத்த முடியாது என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.


    இது தொடர்பாக, ம.பி., அரசு தாக்கல் செய்த வழக்கில், நீதிபதி, ஏ.ஆர்.தவே தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு, நேற்று அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது: மருத்துவ கல்விக்கு, நீட் எனப்படும், பொது நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும் என்று, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே தீர்ப்பளித்து உள்ளது. 

    தனியார் மருத்துவ கல்லுாரிகள், பல்கலைகளுக்கும் இது பொருந்தும். நுழைவுத்தேர்வை நடத்துவதுடன், மாணவர்களுக்கான கவுன்சிலிங்கையும், மாநில அரசுகள் மட்டுமே நடத்த முடியும். அதையும் மீறி, தனியார் கல்லுாரிகள், பல்கலைகள் நடத்திய கவுன்சிலிங் செல்லுபடியாகாது.


    தனியார் கல்லுாரிகளுக்கான கவுன்சிலிங்கை, வரும், 30ம் தேதிக்குள், மாநில அரசு நடத்திட வேண்டும். இந்த கவுன்சிலிங்கில், தனியார் கல்லுாரி பிரதிநிதிகள் பார்வையாளராக பங்கேற்கலாம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    No comments: