Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, September 23, 2016

    மாணவர்கள் உதவியுடன் ஜொலிக்கும் அரசு தொடக்கப்பள்ளி!

    கீழக்கரை, பெரியபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்னாள் மாணவர்கள் நிதி உதவியுடன் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஜொலித்து வருகிறது. பெரியபட்டினத்தில் சேகு ஜலாலுதீன் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 77 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு ஒன்று முதல் 5வது வகுப்பு வரை 175 மாணவர்கள் படிக்கின்றனர்.


    தலைமையாசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த பள்ளியை தரம் உயர்த்தவேண்டும், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து நிதி உதவி செய்து வருகின்றனர். இதன்மூலம் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் ஒன்றிய தொடக்கப்பள்ளி ஜொலித்துவருகிறது.

    இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் கொன்னமுத்து கூறுகையில், கடந்த 2014ல் பள்ளிக்கு மராமத்து வேலைகள் செய்து, வர்ணம் பூசி அனைத்து வகுப்பறைகளுக்கும் மின் விளக்கு, விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது. கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், தற்போது வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஒருங்கிணைந்து முன்னாள் மாணவர் சங்கம் உருவாக்கி, இதன்மூலம் நிதி உதவி வழங்கிவருகின்றனர், என்றார்.

    No comments: