Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 12, 2016

    7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கண்டிப்பு !

    புதுச்சேரி பிரதேசம் மத்திய அரசின் நேரடி பார்வையில் இருந்து வருகிறது. மத்திய அரசு அமல்படுத்திய ஏழாவது ஊதிய உயர்வைக் கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரி அரசு கிடப்பில் போட்டுவிட்டது. இதுதொடர்பாக, புதுச்சேரி அரசு ஊழியர்கள், மத்திய உள்துறைக்கு புகார்கள் அனுப்பியுள்ளார்கள். செப்டம்பர் 8ஆம் தேதி மத்திய உள்துறை  அமைச்சகத்திலிருந்து, துணைநிலை ஆளுநருக்கும், தலைமைச் செயலருக்கும் கடுமையான கண்டிப்புடன் போன்கால் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர், முதல்வர் நாராயணசாமியை அவசரமாக அழைத்து கலந்து பேசினார். இதையடுத்து, இரவோடு இரவாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தினார் முதல்வர். அதைத் தொடர்ந்து, ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்துவது சம்பந்தமாக, செப்டம்பர் 9ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தில், ‘ஏழாவது ஊதிய உயர்வு அமல்படுத்தப்படுகிறது’ என்று அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி. அந்த தகவல்களைத் தலைமைச் செயலரும், துணைநிலை ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள். ‘மத்திய அரசு நேரடியாக தலையீட்டு கண்டிப்பு செய்தது இதுதான் முதன்முறை’ என்கிறார்கள் அமைச்சரவையில் உள்ளவர்கள்.

    No comments: