Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 19, 2016

    எம்.பி.பி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்வு 21ல் துவக்கம்

    தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 21ல் துவங்கி, 24 வரை நடக்கிறது. தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூன் இறுதியில் நடந்தது. அரசு கல்லுாரிகளில், 2,379 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவக் கல்லுாரியில், 85; சுயநிதி கல்லுாரிகளில், 470 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின.


    ஒதுக்கீடு பெற்றோரில், அரசு கல்லுாரிகளில், 21 பேர் உட்பட, 143 பேர் சேராததால், அந்த இடங்கள் காலியாக உள்ளன. 18 சுயநிதி கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 1,020 பி.டி.எஸ்., இடங்களுக்கும் சேர்த்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 21 முதல் நடத்தப்படுகிறது.

    இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது:
    அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நாளை முடிகிறது; நிரம்பாத இடங்கள் மாநிலத்திற்கு கிடைக்கும். அந்த இடங்களுக்கும் சேர்த்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 21ல் துவங்கி, 24ம் தேதி வரை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடத்தப்படுகிறது.

    பிற சுயநிதி கல்லுாரிகள் எதற்கும், மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கடிதம், இந்திய மருத்துவக் கவுன்சிலில் இருந்து வரவில்லை. அனுமதி கிடைத்தால், அந்த கல்லுாரிகளிடம் இருந்து மாநில ஒதுக்கீடாக கிடைக்கும் இடங்களும் கலந்தாய்வில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: