Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, September 28, 2016

    சட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்

    மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டப்படி, மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என, தெரியவந்துள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத சேர்க்கை நடக்க வேண்டும். ஏழை குடும்பங்களை சேர்ந்த, ஐந்து வயது முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களை சேர்க்க வேண்டும்.
    இந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை, மாநில அரசுகளின் வழியாக, மத்திய அரசு வழங்கும். அதன்படி, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், 85 ஆயிரம் குழந்தைகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர்க்க முடிவதில்லை. இதுகுறித்து, கல்வி உரிமை சட்ட கண்காணிப்பு அமைப்பான, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆணைய விசாரணையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், விதிகளை மீறியது தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக, ஆணைய உறுப்பினர் ரேவதி கூறுகையில், ''எங்கள் விசாரணையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 25 சதவீத ஏழை மாணவர்கள் சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்தது. அந்த பள்ளிகளின் பட்டியலை சேகரித்து வருகிறோம்; மேல் நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரைக்க உள்ளோம்,'' என்றார்.

    No comments: