தமிழ்நாட்டில் 1.4.2003ல் இருந்து CPS திட்டம் அமுலில் உள்ளது. இன்று வரை அத்திட்டத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 400க்கு மேற்பட்டவர் ஓய்வு, இறப்பு பெற்றள்ளனர். உரிய பலன் பெற தொடர் போராட்டத்தில் உள்ளோம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 1. 1. 2004ல் இருந்து அமுல் படுத்தி ஓய்வூதியம், பணிக்கொடை முறையாக வழங்கப்படுகிறது.
புதிய ஓய்வூதியத்தை எதிர்த்து பழைய ஒய்வூதியத்தை தொடர வேண்டி மதுரை உயர் நீதி மன்றத்தில் தனி ப்பட்ட பொது நல வழக்கு (WP 3802/12) தொடர்ந்து, நடத்தி வருகிறார் திரு பிரடெரிக் எங்கெல்ஸ்.
இவ்வழக்கின் தொடர் நிகழ்வாக வரும் 1. 6. 15 அன்று நிதித் துறை செயலாளர் நேரில் ஆஜராக மதுரை உயர் நீதி மன்ற கிளை உத்திரவு பிறப்பித்து உள்ளது.
அவரின் இத்தகைய பொது நல முயற்சி வெற்றி பெற நமது சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
No comments:
Post a Comment