Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 19, 2015

    திறமையான ஊழியர்கள் கிடைக்காமல் சர்வதேச நிறுவனங்கள் திணறல்: ஆய்வு

    இந்தியாவில் செயல்படும் பல சர்வதேச நிறுவனங்கள், திறமையான ஊழியர்கள் கிடைக்காததால், காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாத சூழ்நிலையில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    மென்பவர் குரூப் என்ற நிறுவனம், சர்வதேச அளவிலான வேலைவாய்ப்பு குறித்த ஆய்வை நடத்தியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களில் பல, போதிய அளவு திறமையான ஊழியர்கள் இல்லாமல் திணறி வருகின்றன. இதனால், 58 சதவீத நிறுவனங்கள் போதிய வேலைவாய்ப்புகள் இருந்தும், திறமையான ஊழியர்கள் இல்லாததால், காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாத நிலையில் உள்ளன.

    தகவல் தொழில்நுட்பம், நிதித்துறை, நட்சத்திர ஓட்டல்களின் வரவேற்பாளர்கள், ஆசிரியர், நிர்வாக உதவியாளர், விற்பனை மேலாளர், இன்ஜினியரிங் போன்ற பணிகள் மற்றும் பல துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.

    இத்துறைகள் தொடர்பான படிப்பில், தேர்ச்சி பெற்றவர்களும் ஏராளமாக உள்ளனர். ஆனால், இவர்களில் திறமைசாலிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளன.

    சர்வதேச நாடுகளை பொறுத்தவரை, ஜப்பானில்தான், 83 சதவீத நிறுவனங்கள் கடுமையான ஆள் பற்றாக்குறையுடன் இயங்குகின்றன.
    இதற்கு அடுத்தபடியாக, பெரு நாட்டில் 68 சதவீத நிறுவனங்களும், ஹாங்காங்கில் 65 சதவீத நிறுவனங்களும் திறமையான ஊழியர்கள் இல்லாமல் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன. இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: