Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 19, 2015

    மத்திய அரசு பணிக்கான தேர்வு வயது வரம்பு தளர்த்தப்படுமா?

    குரூப் - பி மற்றும் குரூப் - சி' பணிகளுக்காக, இந்தாண்டு நடத்தப்படும், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான (சி.ஜி.எல்.இ.,) வயது வரம்பை, தளர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த தேர்வு குறித்து, பணியாளர் தேர்வு ஆணையமான - எஸ்.எஸ்.சி., ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், விண்ணப்பதாரரின் வயது வரம்பு, 2015 ஆக., 1ம் தேதி அடிப்படையில் கணக்கில் கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: வயது வரம்பை தளர்த்துவது தொடர்பாக, ஏராளமான விண்ணப்பதாரர்களிடம் இருந்து, அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதனால், இந்தாண்டு, ஜன., 1ம் தேதி நிலவரப்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை எட்டியவர்களுக்கும், ஒருமுறை சலுகையாக, தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    No comments: