Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 19, 2015

    ஆசிரியைக்கு உடல்நலம் பாதிப்பு: பணியில் இருந்து விடுவித்து பணப்பலன்களை வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

    கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு கூறி இருந்ததாவது:- என் மனைவி அல்போன்ஸ், நட்டலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால், அவரை பணியில் இருந்து விடுவித்து, பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன்.
    எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் மனைவியை பணியில் இருந்து விடுவித்து, அவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பலன்களையும் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. 


    இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். முடிவில், ‘மனுதாரரின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரரின் மனைவியை பணியில் இருந்து விடுவித்து பணப்பலன்களை வழங்க கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    No comments: