புதுச்சேரியில் நேற்று நடந்த வி.ஏ.ஓ ., தேர்வில் ஆயிரம் பேர் பங்கேற்றனர். புதுச்சேரி அரசின் வருவாய் துறையில் காலியாக உள்ள வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இத்தேர்வில் பங்கேற்க 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு நேற்று காலை பாரதிதாசன் கல்லூரி, சமுதாயக் கல்லூரி, விவேகானந்தா, பெத்தி செமினார் பள்ளி உள்ளிட்ட மையங்களில் நடந்தது.
காலை முதல் மதியம் வரை நடைபெற்ற தேர்வில் 19 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். மாகியில் இயக்குனர் உத்தமன், ஏனாமில் பன்னீர்செல்வம், காரைக்காலில் அரசு செயலர் தங்கசாமி ஆகியோரது மேற்பார்வையில் தேர்வு நடந்தது. கலெக்டர் தீபக்குமார் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment