Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 26, 2014

    பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை மத்திய அரசு உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு

    தமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டில் 10, 11  மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி  மாணவர்கள் 7 லட்சத்து 23ஆயிரம் பேர் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை கேட்டு  விண்ணப்பித்துள்ளனர்.
    கல்வியாண்டின் இறுதி கட்டத்துக்கு வந்துவிட்ட நிலையில், தமிழக மாணவர்களுக்கு  வழங்க வேண்டிய ஸீ549 கோடி இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. ஆராய்ச்சி படிப்பை  (எம்.பிஎல், பி.எச்டி) மேற்கொண்டுள்ளவர்களுக்கும் யூஜிசி மூலம்  மத்திய அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. இதுவும் பல மாதங்களாகியும்  கிடைக்காத நிலையே நீடிக்கிறது. 5 வருட ஆராய்ச்சி படிப்பில்  பொதுப்பிரிவில் தேர்வாகும் மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுக்கு  மாதந்தோறும் ஸீ16 ஆயிரமும், அடுத்த 3 ஆண்டுக்கு மாதந்தோறும்  ஸீ18ஆயிரமும் வழங்கப்படுகிறது.  இதோடு புத்தகம் வாங்க, வீட்டுப்படி  உள்ளிட்ட இதர செலவுக்கு  குறைந்தபட்சம் ஸீ10 ஆயிரம் வரை  வழங்கப்படுகிறது. தேசிய அளவில்  தேர்வு செய்யப்பட்டு, ஸ்காலர்ஷிப் பணம்  இறுதி செய்யப்பட்ட பிறகே பல்கலைக்கழகங்களில் சேர்க்கை நடக்கிறது. இவ்வாறு சேர்ந்த மாணவர்கள் பலரும் ஆராய்ச்சி படிப்பை முடிக்கும்  நிலைக்கு வந்துவிட்டனர். ஆனால் ஸ்காலர்ஷிப் மட்டும் கிடைத்தபாடில்லை. 

    திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி  கூறுகையில், முதல் 8  மாதங்களுக்கு பணம் வழங்கப்பட்டது.  தற்போது 4 ஆண்டில் முதுநிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்.  இளநிலையில் 18 மாதங்களும்,  முதுநிலையில் 24 மாதங்களும் எனக்கு  உதவித் தொகை வரவேண்டி  உள்ளது. எல்லாம் சேர்த்து ஸீ6 லட்சம் வரையில் எனக்கு மட்டும் பணம் வழங்க  வேண்டும். பல்கலைக்கழகங்களின் அலட்சியம் தான் இதற்கு காரணம். ஆராய்ச்சிக்கு தேவையான பணத்தை  திரட்டுவதிலேயே அதிக நேரம்  செலவாகி விடுகிறது. பலரும் நகைகளை  அடகுவைத்து ஆராய்ச்சியில்  ஈடுபட்டுள்ளனர். எனவே ஆராய்ச்சி  கல்வி முடிவதற்குள் கல்வி உதவி தொகை கிடைக்க தேவையான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    No comments: