Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, February 28, 2014

    உண்மை நிலை....

    அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டம் நடத்தினாலே ஊதிய உயர்வுக்குத் தான் என்ற ஒரு தவறான மனநிலையை மக்கள் மனநிலையில் பதிய வைத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள்.

    உண்மையில் நடப்பது என்னவெனில் எங்களுடைய ஊதியத்தில் 10%தை பிடித்தம் செய்து தனியார் பங்குச்சந்தை எனும் சூதாட்டத்தில் முதலீடு செய்து லாபம் வந்தால் உங்களுக்கு நட்டம் வந்தாலும் உங்களுக்கே என்ற நிலையை மத்தியில் உள்ள ஆளுகிற கட்சியும் ஆளவேண்டும் என்கிற கட்சியும் சேர்ந்து செயல்படுத்தி வருகின்றன.

    இது பல லட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரத்தையே கேள்வியாக்கியுள்ளது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

    உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டம் கொண்டு வந்த அரசு எங்கள் பணம் யார் கையிலோ என்ற முறையில் செயல்படுத்துவது நியாயம் தானா?

    ஊதியக்குழு என்பது தற்போது வாங்கும் ஊதியத்தை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப உயர்த்தி வழங்கப் பரிந்துரைக்கும் ஆனால் எங்கும் இல்லாத யாரும் கண்டிராத ஆறாவது ஊதியக்குழு வாங்கிய சம்பளத்தையே குறைத்துக் கொடுக்க பரிந்துரை செய்து வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.

    அதில் உள்ள குளறுபடிகளை நீக்கித் தாருங்கள் எனப் போராடினால் அதையும் தவறாக சித்தரிக்க முயல்கின்றனர்.

    இதை வேலைக்கு வரும் வரை எதிர்ப்பவர்கள் வேலைக்கு வந்தவுடன் ஆதரிக்கிறார்கள் இதற்கு காரணம் உண்மைநிலை தெரியாததா ?இல்லை தன் சுயநலமா என்பதும் தெரியவில்லை .

    எனவே ஒரு போராட்டம் எனில் அதன் உண்மைநிலை தெரிந்து விமர்சிப்பதே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.

    2 comments:

    Anonymous said...

    100% true

    Anonymous said...

    நல்ல. முறையில். இதை எங்கே விளக்கி சொல்ல தலைவர் கள் இல்லையே .தலைவர்கள் தங்கள் அணி பெரியதாக காட்ட அலையும் போது பாவம் இ நி ஆசிரியர் கள்