Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 28, 2017

    தற்காலிக பேராசிரியர் நியமனம் பாரதியார் பல்கலையில் எதிர்ப்பு

    பாரதியார் பல்கலையின் வரலாறு மற்றும் சுற்றுலா துறைக்கு, தற்காலிக பேராசிரியர்கள் தேர்வு செய்வதற்கான நேர்காணல், சமீபத்தில் நடந்தது. இவர்களுக்கு, மாதம், 12 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள், 2017 - 18ம் கல்வியாண்டு வரை அல்லது நிரந்தர பேராசிரியர்கள் தேர்வு செய்யும் வரை பணிபுரிய உள்ளனர். 


    யு.ஜி.சி., விதி 

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல்கலை பேராசிரியர்கள், பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., விதிமுறைப்படி, நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து, பல்கலை ஆசிரியர்கள் கூறியதாவது: 

    வரலாறு மற்றும் சுற்றுலா துறை துவங்கப்பட்டு நீண்ட ஆண்டுகளாகியும், இதுவரை ஒருவர் மட்டுமே நிரந்தர பேராசிரியராக உள்ளார்; மற்றவர்கள் தற்காலிக பேராசிரியர்கள். யு.ஜி.சி., விதிமுறைப்படி ஒரு துறைக்கு, ஆறு நிரந்தர பேராசிரியர்கள் இருக்க வேண்டும். மற்ற துறைகளில் இந்நடைமுறை உள்ளபோது, வரலாறு மற்றும் சுற்றுலா துறைக்கு மட்டும் தற்காலிக பேராசிரியர்களாகவே உள்ளனர்.

    மேலும், அண்ணாமலை பல்கலை உபரி ஆசிரியர்களை, இங்கு பணியமர்த்தும் நோக்கில், நிரந்தர பேராசிரியர்கள் நியமனம் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. 

    காலி பணியிடம் 

    ஏற்கனவே, அரசுக் கல்லுாரிகளில் அண்ணாமலை பல்கலை ஆசிரியர் களை நியமிப்பதற்கு, எதிர்ப்பு வலுத்து வருகிறது. எனவே, பாரதியார் பல்கலையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு, நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

    No comments: