Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 30, 2017

    செயல்படாத பள்ளிகள்; ’நிடி ஆயோக்’ அதிரடி

    உரிய முறையில் இயங்காத அரசு பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்க, ’நிடி ஆயோக்’ பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசுக்கு, திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை அளித்து வரும் அமைப்பான, ’நிடி ஆயோக்’ மூன்றாண்டு செயல் திட்ட அறிக்கையை, சமீபத்தில் வெளியிட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: 


    நாடு முழுவதும், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. அதேசமயம், அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்து வருகிறது.அதேநேரத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

    ஆசிரியர்களின் வருகை பதிவு குறைவு, குறைவான நேரம் கற்பித்தல், மோசமான கல்வி தரம் போன்ற காரணங்களால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. தனியார் பள்ளிகளை விடவும், அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதமும் குறைகிறது. 

    இதற்கு மாற்று வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. உரிய செயல்பாடு இல்லாமல் இருக்கும், அரசு பள்ளிகளை, தனியார் வசம் ஒப்படைக்கலாம்; அரசு - தனியார் கூட்டு முயற்சியில் பள்ளிகளை நடத்தலாம்.

    இதற்கு ஆகும் செலவை, தலா ஒரு குழந்தைக்கு என கணக்கிட்டு, அரசு நிதியில் இருந்து வழங்கலாம். இதன் மூலம், பள்ளிகளை சரி வர நிர்வகிப்பதுடன், ஆசிரியர்களையும் கண்காணிக்க முடியும். பள்ளிகளை நடத்துவதற்காக, அரசு செய்யும் தேவையற்ற செலவு, பெருமளவு குறையும்.

    இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தி, மத்திய அரசு, புதிய திட்டத்தை உருவாக்கலாம். தயாராக உள்ள மாநிலங்களில், பரிசோதனை அடிப்படையில், அரசு - தனியார் இணைந்து, பள்ளிகளை நடத்தலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    No comments: