Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, March 3, 2017

    பிளஸ் 2 தேர்வு துவங்கியது : அரசு பள்ளி தேர்ச்சி அதிகரிக்குமா?

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு துவங்கியது. 'இந்த ஆண்டு, அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெறுவர்' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.பிளஸ் 2 தேர்வில், ஒன்பது லட்சத்து, 33 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

    சென்னையில், 407 உட்பட மொத்தம், 2,434 மையங்களில் தேர்வு நடந்தது. அனைத்து மையங்களிலும், மாணவ, மாணவியர், காலை, 9:00 மணிக்கே வரவழைக்கப்பட்டனர்; முதலில், பிரார்த்தனை நடந்தது. பின், தேர்வு நடைமுறைகள் குறித்து, மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்வு துவங்கியதும், மாணவர்கள் முன்னிலையில், வினாத்தாள் கட்டு, 'சீல்' உடைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. நேற்று, மொழி பாடத்திற்கான முதல் தாள் தேர்வு நடந்தது. அதாவது, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, பிரெஞ்ச், மலையாளம், ஹிந்தி, உருது, அரபிக், சமஸ்கிருதம் மற்றும் ஜெர்மன் ஆகிய, 10 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு பணிகளை, அமைச்சர் செங்கோட்டையன், செயலர் சபிதா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ''பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெறுவர்,'' என்றார்.

    No comments: