Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, March 31, 2017

    ஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. ஆய்வக உதவியாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்டங்களில் காலிப் பணியிடங்களுக்கு தகுந்த வகையில், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


    இதற்காக, எழுத்துத் தேர்வில் தேர்வானவர்கள் குறித்த பட்டியல், ஏப்ரல் 1,2ஆம் தேதிகளில், அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒட்டப்படும். உரியவர்களுக்கு அழைப்புக் கடிதமும் அனுப்பி வைக்கப்படும்.

    காலியிடத்துக்கு தகுந்தாற் போல், 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்படுவர். இதனையடுத்து, அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஏப்ரல் 9 முதல் 11-ஆம் தேதி வரை இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
    Weightage Calculation  Method

    1.எழுத்துத் தேர்வு - 150க்கு பெற்ற  மதிப்பெண் 
    2.வேலைவாய்ப்புப் பதிவு - 10 மதிப்பெண்
    3.கூடுதல் கல்வித் தகுதியாக பிளஸ் 2 க்கு - 2 மதிப்பெண்
    4.பட்டப்படிப்புக்கு - 3 மதிப்பெண்
    5.ஆய்வக உதவியாளர் அனுபவச் சான்று இருந்தால் - 2 மதிப்பெண்

    இதனையடுத்து, இனசுழற்சி இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஒரு வாரத்தில் பணி ஆணை வழங்கப்படும்.

    இந்த நியமனம் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், வெளியிடப்பட்ட அரசாணைப்படி நேர்மையாக நடைபெறும்.

    No comments: