Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, February 1, 2014

    தமிழாசிரியர் பணியிடங்கள் காலி:தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம்

    மாநிலம் முழுவதும் செயல்படும், உயர்நிலை, ல்நிலைப்பள்ளிகளில் முதுகலை மற்றும் பட்டதாரி தமிழாசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், இப்பாடத்தில் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    தமிழகம் முழுவதும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில், ஆறு முதல் ??ம் வகுப்பு வரை செயல்படும் உயர்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி தமிழாசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளது.

    இதனால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கணிதம், அறிவியல் போன்ற பிற பாடங்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள மாற்று ஏற்பாடுகள் பள்ளிக்கல்வித்துறையால் செய்யப்பட்டுள்ளது. தமிழ் பாடத்திற்கு, இதுபோன்ற மாற்று ஏற்பாடுகள் ஏதும் செய்யாமல் கல்வித்துறை மெத்தனத்துடன் செயல்பட்டு வருகிறது.தமிழ் மாணவர்களுக்கு படிப்பதற்கு எளிமையாக இருப்பினும், முதல் தாளில் செய்யுள் பகுதியும், இரண்டாம் தாள் முழுவதும் இலக்கணப்பகுதியும் உள்ளது.

    இலக்கணம் மற்றும் செய்யுள் பகுதியை ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் மாணவர்கள் புரிந்துகொள்வது என்பது இயலாதது. மனப்பாடம் செய்வதும் சிரமம்.தமிழக தமிழாசிரியர் மாநிலத்தலைவர் ஆறுமுகம் கூறுகையில்,''கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் மட்டுமே தற்போது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளது. தெளிவான முடிவு

    களை மேற்கொள்ளாததால் நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில், கடந்த கல்வியாண்டு துவக்கம் முதல் தற்போது வரை ???? தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. இதனால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தமிழ் பாடத்தால் குறையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

    1 comment:

    Karthik said...

    Anybody can ask what is the qualifications to write the tet exam for tamil pandit and B.T. Tamil please.