Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 10, 2014

    தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி

    வேலூர், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


    அணைக்கட்டு சட்டசபை தொகுதியில் உள்ள, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில், கடுமையான குடி நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, நாள் தோறும், 750 உள்நோயாளிகளும், 2,000த்துக்கு மேற்பட்ட புறநோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் வந்து செல்கின்றனர்.

    மேலும் மருத்துவக் கல்லூரியில், 800 மாணவர், நர்சிங் கல்லூரியில், 160 மாணவியர் படிக்கின்றனர். மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு, 4 லட்சம் லிட்டர் குடி தண்ணீர் தேவைப்படுகிறது. மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள நாக நதியில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு தண்ணிர் சப்ளை செய்து வந்தனர்.

    கடந்த ஒரு ஆண்டாக நாக நதியில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டதால், மருத்துவக் கல்லூரி, மருத்துவனை கடுமையான குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்தாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதி, இரண்டு மாதம் மூடப்பட்டது.

    இதை அடுத்து அணைக்கட்டு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, இரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதில் இருந்து வரும் தண்ணீர் மாணவர் விடுதிக்கு மட்டும் சப்ளை செய்யப்படுகிறது. மருத்துவக் கல்லூரி, மருத்துவனை வளாகத்தில், 26 ஆழ்துளை கிணறு உள்ளது. இதில் ஐந்தில் மட்டும் தண்ணீர் சப்ளையாகிறது.

    வேலூர் மருத்துக்கல்லூரி, மருத்துவனை அமைந்துள்ள பென்னாத்தூரில் கடுமையான தண்ணீ பிரச்சனை நிலவுகிறது. இதனால் வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும், காவிரி குடி நீர் திட்டம், பென்னாத்தூர் பேருராட்சிக்கும் செயல்படுத்த நடவடிக்கை வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    No comments: