Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 6, 2014

    உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை டி.இ.ஓ.,வாக நியமிக்க வலியுறுத்தல்

    மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு, (டி.இ.ஓ.,), உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


    தமிழகத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களில், 25 சதவீதம் நேரடி தேர்வு மூலமும், 75 சதவீதம் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது. கடந்த காலங்களில் 75 சதவீதம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களால் நிரப்பப்பட்டன. அதில், தற்போது 40 சதவீதம் அரசு உயர்நிலைப்பள்ளி, 35 சதவீதம் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படுகிறது.

    மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்குரிய சம்பளம் பெறுகின்றனர். புதிய அரசாணையை ரத்து செய்து, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை, மாவட்ட கல்வி அலுவலராக நியமித்தால் தான் பயனுள்ளதாக இருக்கும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகி முத்துச்சாமி கூறினார்.

    அவர் கூறுகையில், "மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நியமிப்பதால் அவர்களுக்கு பயனில்லை. பதவி உயர்வு பெற்ற சில மாதங்களில், ஓய்வு பெறுகின்றனர். இதனால் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலராக பதவி ஏற்க மறுக்கின்றனர். எனவே, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை, மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கும் பழைய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றார்.

    No comments: