Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 20, 2014

    தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பிப்.25, 26-இல் வேலைநிறுத்தம்

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வருகிற 25, 26-ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.


    மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்; அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தமிழாசிரியர், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; பகுதிநேர சிறப்பாசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக நிலை உயர்த்த வேண்டும்; கல்வித் துறை அலுவலக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில் வருகிற 25-ஆம் தேதி கருப்புப் பட்டை, கோரிக்கை அட்டை அணிந்து பள்ளி உள்ளிருப்பு போராட்டமும், 26-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.

    இதேபோல, பதவி உயர்வுக்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்; ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்துக்காக காத்திருப்போருக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் மார்ச் 2-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

    1 comment:

    Anonymous said...

    MR.eashwaran sir.u only easy to talking CM.why u r avoid ?