Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 20, 2014

    புத்தகம் கொண்டு வராததை, ஆசிரியர் கண்டித்ததால், தீக்குளித்த பள்ளி மாணவன்

    புத்தகம் கொண்டு வராததை, ஆசிரியர் கண்டித்ததால், தீக்குளித்த பள்ளி மாணவன், ஆபத்தான நிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த முத்து மகன் விக்னேஷ்குமார்,14. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில், 9 ம் வகுப்பு படிக்கிறார். ஆங்கிலம், கணக்கு புத்தகங்கள் கொண்டு வராததால், வகுப்பாசிரியர் கண்டித்து, மாணவனை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியுள்ளார்.நாளை புத்தகத்தை கொண்டு வராவிட்டால், பெற்றோருடன் வந்து தலைமை ஆசிரியரை சந்திக்க வேண்டும், என கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த மாணவன், பள்ளி முடிந்த பின், வீட்டிற்கு சென்று, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றிய மாணவனை, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவன், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், இதை தெரிவித்து உள்ளார். இந்நிலையில் மாணவன் தீக்குளித்த செய்தி பரவியதால், மாணவர்களும், உறவினர்களும், நேற்று இரவு பள்ளி முன், மறியலில் ஈடுபட்டனர். கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

    No comments: