Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, February 16, 2014

    தமிழகத்தில் 1,851 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்

    தமிழகத்தில் 1,851 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 2010-11ல் பள்ளி தகவல் மேலாண்மை அறிக்கையின் படி, ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான வகுப்பறைகள் கட்டுவதற்கு, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் 1,851 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்; 698 ஆய்வகங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில், கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தன. இனி, "பொதுப் பணித்துறைக்கு நிதி வழங்கப்பட்டு, புதிய வகுப்பறைகள் கட்டப்படும்" என அனைவருக்கும் இடைநிலை கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments: