ஆசிரியர்களின் அஜாக்கிரதையால், சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பையூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி நேற்று முழுவதும் திறக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.
இந்த பள்ளியில், ஒரு தலைமையாசிரியரும், ஒரு ஆசிரியையும் உள்ளனர். 22 பேர் படிக்கிறார்கள். நேற்று பணிக்கு ஆசிரியர் யாரும் வரவில்லை. ஆனால், மாணவர்கள் வந்திருந்தனர். மாலை வரை பள்ளி திறக்கப்படவே இல்லை.
இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை கூறியதாவது: நான் நேற்று விடுமுறை எடுத்திருந்தேன். மற்றொரு ஆசிரியை மாற்றுப்பணிக்கு, பூலாங்குறிச்சி பள்ளிக்கு சென்று விட்டார். வேறு ஒரு ஆசிரியரை நியமித்திருப்பார்கள். அவர் ஏன் வரவில்லை என தெரியவில்லை" என்றார்.
உதவி தொடக்க கல்வி அலுவலர் அமலதாஸ் கூறியதாவது: தகவல் அறிந்து நல்லிபட்டி ஆசிரியர் ஒருவரை அனுப்பினோம். அவர் வர தாமதம் ஆகியிருக்கலாம், என்றார். எது எப்படியோ, நேற்று 22 மாணவர்களின் படிப்பு "அம்போ" என்பது மட்டும் உண்மை.
No comments:
Post a Comment