பள்ளிகளில் உபரி என்று கருதி வெளியேற்றப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் அதே பள்ளியில் நியமிக்க வேண்டும். உபரி பட்டியல் தயாரிப்பதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கூறியுள்ளார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஜெயசந்திரன், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த ஜூலை மாதம் உபரி என கணக்கிடப்பட்ட ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள்ளும், வேறு மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டனர். இதனால் கர்ப்பிணிகள், ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர். தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், உபரி பணியிடம் என ஆசிரியர்களை வெளியேற்றிய பள்ளியில் அதே பாடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் ஆசிரியர்கள் நலனுக்கு எதிரானதாகும்.
எர்ணாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் ஒரு பட்டதாரி தமிழ் ஆசிரியர் உபரி என கடந்த ஜூலையில் காட்டப்பட்டு வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். தற்போது அதே பள்ளிக்கு ஒரு தமிழ் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்ற பல பள்ளிகளில் இந்த குளறுபடி நடந்துள்ளது. எனவே உபரி பணியிடமாக கருதி வெளியேற்றிய ஆசிரியர்களை மீண்டும் அதே பள்ளியில் நியமனம் செய்ய வேண்டும். இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment