Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, December 7, 2012

    "ஆரம்ப கல்வி மிக முக்கியமானது சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்' - அப்துல்கலாம்

    "ஆரம்பக்கல்வி மிகவும் முக்கியமானது. இதில், தேவையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வலியுறுத்தினார்.
    மாணவ, மாணவர்களின் கேள்விகளுக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், உற்சாகமாக பதில் அளித்தார்.

    மாணவர்களின் கேள்விகளும், கலாம் அளித்த பதில்களும்:

    சரண்யா: சீனாவில் உள்ள பல்கலைக்கு சென்று பேசினீர்களே... அங்குள்ள கல்வித்தரம் திருப்தி அளிக்கிறதா?
    சீனா வேறு; நாம் வேறு. அவர்களுக்கு ஒரு லட்சியம்; நமக்கும் ஒரு லட்சியம். அங்கு, தொழில்நுட்ப முன்னேற்றம் உள்ளது. 2020ம் ஆண்டில், இந்தியாவும் வளர்ந்த நாடாக மாறும்.

    முகமது முஸ்தபா: தற்போதைய கல்வி முறை சிறப்பாக உள்ளதா; மாற்றம் தேவையா?
    தற்போதைய கல்வி முறை, ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி என, மூன்று நிலைகளில் உள்ளன. இதில், ஆரம்ப கல்வியில், சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். இந்த நிலை, மிகவும் முக்கியமானது. படைப்புத்திறனை உருவாக்கக்கூடிய வகுப்புக்கள், ஆசிரியர்கள் மிகவும் தேவை. இந்த வகை வகுப்புகளும், ஆசிரியர்களும் இருந்தால், ஆரம்பக்கல்வி மிகச்சிறப்பாக இருக்கும்.

    ஹெலன் சோனியா: சரித்திரம், ஆங்கிலம், மொழிப்பாடப்பிரிவுகளை மாணவர்கள் ஆர்வம் இல்லாமல் படிக்கின்றனர். மற்ற பாடங்களைப்போன்று, இந்த பாடங்களையும், ஆர்வமுடன் படிக்க என்ன செய்யலாம்?
    நானும் தமிழ் வகுப்பில் தான், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பாடத்தில் ஆர்வம் ஏற்படுவது, சம்பந்தபட்ட ஆசிரியர் மற்றும் அவரின் கற்பிக்கும் விதத்தை பொறுத்தது இருக்கும். படைப்புத்திறன் மிக்க ஆசிரியர்கள் இருந்தால், ஆர்வம் தானாக வரும்.

    தினகரன்: விரைவில் உலகம் அழியும் என்ற ரீதியில், நாளிதழ் ஒன்றில் செய்தி படித்தேன். இது உண்மையா?
    சந்திரசேகரன் சுப்பிரமணியன், சந்திரயானைக் கண்டுபிடித்தார்; நோபல் பரிசு பெற்றார். அவர் ஆய்வின்படி, இந்த பூமியும், சூரியனும், 10 பில்லியன் ஆண்டுகள் வரை சுற்றிக் கொண்டே இருக்கும். கவலை வேண்டாம். ஏற்கனவே, 5 பில்லியன் ஆண்டுகள் சுற்றிவிட்டன. இன்னும், 5 பில்லியன் ஆண்டுகள் மீதம் இருப்பதால், இப்போதைக்கு கவலை வேண்டாம்.

    வினிதா: நாட்டு மக்களின் வாழ்க்கைத்தர வேறுபாடு, மலைக்கும், மடுவுக்குமாக உள்ளது. ஏழை, ஏழையாகவே இருக்கிறான்; பணக்காரர் பணக்காரராகவே இருக்கின்றனர். இந்த ஏற்றத்தாழ்வு குறையுமா?
    இந்தியாவில், 6 லட்சம் கிராமங்கள் உள்ளன. 75 சதவீத மக்கள் அங்கு வசிக்கின்றனர். இந்த ஏற்றத்தாழ்வு, வேறுபாடுகள் எல்லாம், 10 ஆண்டுகளில் குறையும். இவ்வாறு கலாம் பதில் அளித்தார்.
    Email ThisBlogThis!

    No comments: