Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 2, 2012

    தனியார் பள்ளிகள் வரம்பிற்குள் மெட்ரிக் பள்ளிகள் வராது

    தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகள் என்ற வரம்புக்குள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் வராது" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    தமிழகம், புதுச்சேரியில் உள்ள, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் அனைத்தும், சென்னைப் பல்கலை, மதுரை பல்கலையின் இணைப்பு பெற்றிருந்தது. பின், மெட்ரிக் பள்ளிகள், பல்கலைகழகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டியதில்லை என, முடிவெடுக்கப்பட்டது.

    மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான போர்டு உருவாக்க, 1977ல், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மெட்ரிக்குலேஷன் போர்டுக்கு, மெட்ரிக் பள்ளிகள் அளிக்க வேண்டிய நிதி பங்களிப்பு குறித்து, 2002ம் ஆண்டு, அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, கிருஷ்ணகிரியில் உள்ள டி.கே.சாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் நிர்வாக சங்கம், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    மனுவை விசாரித்த, நீதிபதிகள் தர்மாராவ், ஆர்.சுப்பையா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்&' பிறப்பித்த உத்தரவு: மெட்ரிக் பள்ளிகள் போர்டின் ஒப்புதல் பெற்று, மெட்ரிக் பள்ளிகளுக்கான விதிமுறைகள், 1978 ஜூன் மாதம், அமலுக்கு வந்தது.

    இந்த வரலாற்றுப் பின்னணி காரணமாகவும், மெட்ரிக் பள்ளிகள் பேணும் குணாதிசயங்கள் காரணமாகவும், தனியார் பள்ளிகள் என்ற வரையறைக்குள் கொண்டு வரப்படவில்லை.

    மனுதாரர்கள், மெட்ரிக் பள்ளிகள் என்ற அந்தஸ்தை நிலை நிறுத்திக் கொள்ள, ஒரு பக்கம் விரும்புகிறது. மறுபக்கம், அரசாணையின் மூலம் நிதிச்சுமை ஏற்படுவதால், இத்தகைய வழக்குகளை தொடுக்கின்றனர். இவர்கள், மெட்ரிக் பள்ளி அந்தஸ்தை இழக்க விரும்பவில்லை.

    தனியார் பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும், தனித் தனியானவை. "தனியார் பள்ளிகள் என்ற வரம்புக்குள், மெட்ரிக் பள்ளிகள் வராது என்பதால், அந்தப் பள்ளிகளுக்கான விதிமுறைகளை வகுக்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது&' என, நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை ஐகோர்ட் நீதிபதியாக சதாசிவம் இருந்த போது, இந்த உத்தரவை பிறப்பித்தார். அவரது உத்தரவில், நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்&' உத்தரவிட்டுள்ளது.

    No comments: