Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, December 11, 2012

    20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி ஒருநாள் பட்டினிப் போராட்டம் - தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

    20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி சென்னை சேப்பாக்கத்தில் டிசம்பர் 29-ம் தேதி ஒருநாள் பட்டினிப் போராட்டம் நடத்த உள்ளதாக, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில நிறுவனர் அப்துல் மஜீத் கூறினார்.
    கடலூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மெட்ரிக் பள்ளிகள் அனைத்திலும் 12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    அப்படி செய்ய முன்வரும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் கல்வி மானியமாகவும் நிர்வாகச் செலவை நிர்வாக மானியமாகவும் அரசே ஏற்று உதவிபெறும் பள்ளிகளை போல நடைமுறைப்படுத்த வேண்டும்.

    ஆசிரியர் நியமனத்துக்குப் புதிதாக கொண்டு வந்துள்ள தகுதித்தேர்வை ரத்து செய்து, பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர்களின் ஆரம்ப ஊதிய விகிதம் ரூ.5,200 என்பதை ரூ.9,300 ஆக நடைமுறைப்படுத்த வேண்டும்.

    உதவி மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் குழந்தைகள் வருகை அடிப்படையிலும், அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் பதிவு அடிப்படையிலும் பள்ளிக்குப் பள்ளிக்கு வேறுபடுத்துவதை மாற்றி அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை பதிவு அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறினார்.

    No comments: