Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 13, 2017

    பின்தங்கும் ஆங்கில வழி மாணவர்கள்!

    அரசு ஆங்கில வழி பள்ளிகளில் படிப்போர், வரும் 2018-19 கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு பாடம் நடத்த, பிரத்யேக ஆசிரியர்கள் நியமித்தால் மட்டுமே, மொழித்திறன் மேம்படும் வாய்ப்பு உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள், 2012 -13 கல்வியாண்டில் துவங்கப்பட்டது.

    தமிழகத்தில், 3,400 ஆங்கில வழி அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், 3.32 லட்சம் மாணவர்கள் படிக்கின்றன. இதில், 2014 -15 கல்வியாண்டில், ஆறாம் வகுப்பில் ஆங்கில வழி துவங்கிய போது சேர்ந்த மாணவர்கள், வரும் 2017-18 கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்புக்கு செல்கின்றனர்.

    அடுத்த கல்வியாண்டில், பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். எட்டாம் வகுப்பு வரை, ’ஆல்பாஸ்’ முறை பின்பற்றப்படுவதால், ஆங்கில வழி மாணவர்களுக்கு பாதிப்பில்லை. இவர்களுக்கு, தமிழ்வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களே வகுப்பு கையாள்கின்றனர். 

    பல அரசுப்பள்ளிகளில், தமிழ்வழியில் படிப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இரு வழிகளில் படிப்போரையும் சேர்த்து, பாடம் நடத்தப்படுகிறது. இதனால், ஆங்கில மீடியம் படிப்போரின், மொழித்திறன் மேம்பட வாய்ப்பில்லை. பொதுத்தேர்வில், அரசு ஆங்கில வழி மாணவர்கள், பின்தங்கும் அபாயம் உள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

    தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,”அரசுப்பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டதால், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

    இவர்களுக்கு, தமிழ்வழியில் பாடம் நடத்தும் ஆசிரியரே, வகுப்பு கையாள அனுமதித்தால், அதிக பணிச்சுமை ஏற்படும். பாடத்திட்ட அழுத்தத்ததை கருத்தில் கொண்டு, அரசு ஆங்கில வழிப்பள்ளிகளுக்கு, புதிதாக ஆசிரியர்கள் நியமனம் செய்தால், வேலையில்லாமல் திண்டாடும் பட்டதாரிகளும் பலனடைவர். பொதுத்தேர்விலும், அரசு ஆங்கில வழி மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற முடியும்,” என்றார்.

    No comments: