Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 24, 2017

    1 முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டம் மாற்றம்! மனப்பாட கல்வி முறைக்கு 'குட்பை'

    மனப்பாட கல்விமுறையை கைவிடும்வகையில், ஒன்று முதல்பிளஸ் 2 வகுப்பு வரை,பாடத்திட்டம்மாற்றப்படுகிறது.அறிவியல் பாடத்தில்,கணினி அறிவியலும் இடம்பெறுகிறது. பள்ளிபாடத்திட்ட மாற்றத்திற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி செயலர்உதயசந்திரன், நேற்றுவெளியிட்டு உள்ளார்.


    அதன் விபரம்: சர்வதேசஅளவிலான அறிவியல்,சமூக, பொருளாதாரவளர்ச்சி, போட்டிதேர்வுகளில், தமிழகமாணவர்களின் வெற்றியைகருத்தில் கொண்டு,பாடத்திட்டம்மாற்றப்படுகிறது.

    சி.பி.எஸ்.இ.,யை விடமேலானதாகவும், தமிழகபண்பாடு, கலாசாரத்திற்குமுக்கியத்துவம் அளிக்கும்விதமாகவும்,பாடத்திட்டத்தை உருவாக்க,மே, 11ல், வல்லுனர் குழுமுடிவு எடுத்தது.

    அதன்படி, 2018 - 19ம்கல்வியாண்டில், ஒன்று,ஆறு, ஒன்பது மற்றும்பிளஸ் 1 வகுப்புகளுக்கு,புதிய பாடத்திட்டம்அமலாகும்.

    2019 - 20ல், இரண்டு, ஏழு, 10மற்றும் பிளஸ் 2வகுப்புகளுக்கும், 2020 - 21ல்,மூன்று, நான்கு, ஐந்துமற்றும் 8ம் வகுப்புகளுக்கும்,பாடத்திட்டம் மாற்றப்படும்.

    ஆறு முதல், 10ம் வகுப்புவரையான, அறிவியல்பாடத்தில், கணினிஅறிவியல் அல்லது ஐ.டி.,எனப்படும், தகவல்தொழில்நுட்பவியல்பற்றியபாடப்பகுதியும்இணைக்கப்படும். இவ்வாறுஅதில் கூறப்பட்டு உள்ளது.

    பாடத்திட்டம் எப்படி மாற்றிஅமைக்கப்பட வேண்டும்என்பது குறித்து, அரசு சிலநெறிமுறைகளைவகுத்துள்ளது.

    அதன் விபரம்:* கற்றலைமனப்பாட நிலையில்இருந்து மாற்றி, படைப்பின்பாதையில் பயணிக்கவைக்க வேண்டும்

    * தோல்வி பயம் மற்றும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்தேர்வுகளை மாற்றி,கற்றலின் இனிமையைஉறுதி செய்யும் வகையில்,பாடம் அமைய வேண்டும்

    * தமிழர்களின் தொன்மை,வரலாறு, பண்பாடு, கலை,இலக்கிய பெருமிதஉணர்வை, மாணவர்கள்,அறிவியல்தொழில்நுட்பத்தின் மூலம்தெரிந்து கொள்ள,பாடத்திட்டம் உறுதி செய்யவேண்டும்

    * அறிவு தேடல் என்பது,வெறும் ஏட்டறிவு என,குறைத்து மதிப்பிடாமல்,அறிவுஜன்னலாய்புத்தகங்கள் வழிகாட்டவேண்டும் என்றஅடிப்படையில், பாடத்திட்டம்அமைய வேண்டும்.

    இவ்வாறு நெறிமுறைகள்வகுக்கப்பட்டு உள்ளன.

    புத்தகம் படிக்க'மொபைல்ஆப்'


    ஆசிரியர்களும்,மாணவர்களும், எளிதில்பயன்படுத்தக் கூடியவகையில், 'மொபைல் ஆப்'என்ற மொபைல் போன்செயலி உருவாக்கப்படும்.ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும்செய்முறை மற்றும் பயிற்சிகையேடுகள் வழங்கப்படும்.


    அண்ணா பல்கலைபாடத்திட்டம்!


    தொழிற்கல்விக்கு, எட்டுஆண்டுகளாக பாடத்திட்டம்மாறவில்லை. வளர்ந்துவரும் தொழில்நுட்பவளர்ச்சிக்கு ஏற்ப,தொழிற்கல்விபாடத்திட்டங்கள் மாற்றம்செய்யப்பட உள்ளன.

    அண்ணா பல்கலை,வேளாண் பல்கலை மற்றும்தொழில்சார்பல்கலைகளுடன்இணைந்து, மாநிலகல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனம்,தொழிற்கல்விபாடத்திட்டத்தை, மாற்றமுடிவு செய்துள்ளது. பிளஸ்1க்கு, 2018 - 19 மற்றும் பிளஸ்2வுக்கு, 2019 - 20ம் ஆண்டில்,இந்த மாற்றம் இருக்கும்.

    No comments: