Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 17, 2017

    இன்ஜி., கலை கல்லூரிகளில் பிளஸ் 1 பாடம் கட்டாயமானது

    பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு நடத்தப்படாததால், கல்லுாரிகளில், பிளஸ் 1 பாடங்கள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 


    அதனால், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இதை, தனியார் பள்ளிகள் தவறாக பயன்படுத்தி, மாணவர்களுக்கு பிளஸ் 1 பாடங்களையே நடத்தாமல், இரண்டு ஆண்டுகளும், பிளஸ் 2 பாடங்களையே நடத்தினர். 

    அதனால், உயர்கல்விக்கு சென்ற மாணவர்கள், அங்கு அடிப்படை பாட அறிவு இல்லாமல், பருவ தேர்வில் தோல்வி அடைகின்றனர். கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்து, அண்ணா பல்கலையின் இன்ஜி., படிப்பில் சேர்ந்தவர்களில், முதல் செமஸ்டர் தேர்வில், 22 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. 

    தேர்ச்சி பெற்றவர்களில் பலர், குறைந்த மதிப்பெண்ணே பெற்றனர்.இதையடுத்து, பிளஸ் 1 வகுப்புக்கும், கட்டாய பொதுத்தேர்வு நடத்த வேண்டும். 

    பிளஸ் 1 மதிப்பெண்ணையும், உயர்கல்விக்கான, ’கட் ஆப்’ மதிப்பெண்ணாக்க வேண்டும் என, அண்ணா பல்கலை சார்பில், தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தற்போது, பிளஸ் 1 படிக்காமல், பெரும்பாலான மாணவர்கள், பிளஸ் 2 முடித்துள்ளதால், அவர்களுக்கு, மீண்டும் பிளஸ் 1 பாடம் நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    இதற்காக, அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளிலும், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், பிளஸ் 1 பாடம், கட்டாய தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. 

    முதல் செமஸ்டரில், 60 வகுப்புகளில், பிளஸ் 1 பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளை, இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், ’பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற முன் தயாரிப்பு வகுப்புகளில் நடத்தி முடிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    பிளஸ் 1 பாடம் தெரியாமல், எந்த மாணவருக்கும், இன்ஜினியரிங் பாடம் நடத்த வேண்டாம் என, பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

    No comments: