Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 24, 2017

    பள்ளி திறப்பு தள்ளி போகுமா? அரசு 2 நாளில் முடிவு!

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று 2 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று அரசு கூறியுள்ளது.

    கோடை வெயில் தாக்கம் காரணமாக இந் ஆண்டு பள்ளிகள் ஏப்ரல் மாதம் முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் தமிழக தலைநகர் சென்னை உள்பட பல மாவட்டங்களில் வெயில் தினமும் செஞ்சுரி அடித்து வருகிறது.

    இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பருவமழை பொய்த்தால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளிலும் இதே நிலை நீடிப்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குடிநீருக்கே அவதிப்படும் நிலை ஏற்படும்.


    பெற்றோர் அச்சம்

    மேலும் பள்ளிக் கட்டிடங்களில் 8 மணி நேரம் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் கடுமையான வெயிலினால் உடல் சோர்விற்கு ஆளாக நேரிடும் என்பதோடு, அம்மை உள்ளிட்ட தொற்றுநோய் அபாயமும் இருக்கின்றன. இதனால் பள்ளிகளை ஏற்கனவே அறிவித்தபடி திறந்தால் மாணவர்களுக்கு வெயில் தாக்கம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பெற்றோர் அஞ்சுகின்றனர்.


    அரசுக்கு கோரிக்கை

    இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளதாக தெரிகிறது. இது பற்றி நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் பள்ளிகளை எப்போது திறப்பது என்று அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.



    2 நாளில் அறிவிப்பு

    மேலும் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு 2 நாட்களில் வெளியாகும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஒரு வாரம் தாமதாக அதாவது ஜூன் 12ம் தேதி திறக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    No comments: