Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 5, 2017

    கல்விக் கட்டணத்தை அறிவித்த பிறகு எம்.டி.,எம்.எஸ்.,சேர்க்கை

    முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை அறிவித்த பிறகே, அதற்கான கவுன்சிலிங் நடத்த வேண்டும் என பெற்றோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


    புதுச்சேரி மாநில அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் நாராயணசாமி, பொருளாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

    மத்திய அரசின் சுகாதார அமைச்சகம், தனியார் நிகர்நிலை, சிறுபான்மையின மருத்துவக் கல்லுாரிகள் அனைத்தும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடங்களை அளிக்க வேண்டும் என்ற உத்தரவால், புதுச்சேரியில் முதல் முறையாக 53 முதுநிலை பல் மருத்துவ இடத்தில், 27 இடங்கள் மாநில அரசுக்கு வழங்கப்பட்டன.

    இதற்கான கலந்தாய்வில், தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் முதுநிலை பல் மருத்துவ இடங்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசு அறிவிக்காததால், ஏராளமான மாணவர்கள் சென்டாக் கலந்தாய்வில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

    எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக கல்விக் கட்டணத்தை அறிவித்த பிறகே, எம்.டி., எம்.எஸ்., படிப்புகளில் வழங்கப்பட்டுள்ள 146 இடங்களுக்கான சென்டாக் கலந்தாய்வை நடத்த வேண்டும். இல்லையென்றால், அரசு பெற்ற 50 சதவீத இடங்கள், புதுச்சேரி மாணவர்களுக்கு பயனில்லாமல் போய்விடும்.

    No comments: