Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, April 11, 2017

    காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைபெறும் அரசுஊழியர்களிடம் பணம் வசூலிக்கும் மருத்துவமனைகள்: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

    மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற வரும் அரசு ஊழி யர்களிடம் மருத்துவமனைகள் பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    திருமங்கலத்தைச் சேர்ந்த சி.தாமோதரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் அரசு உதவி பெறும் கல்லூரியில் ஆய்வக தொழில்நுட்பநராக பணிபுரிந்து வருகிறேன். இருதய நோயால் பாதிக்கப்பட்ட எனக்கு இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.இதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற சென்றபோது ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத் தில் சிகிச்சை பெற பணம் செலுத்த வேண்டியதில்லை எனக் கூறப் பட்டது. ஆனால், இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை களில் 50 சதவீத கட்டணம் வசூலிக் கின்றனர். இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்காளத்தில் அமலில் உள்ள மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தில் அரசுஊழியர்கள் முழு பயனடைந்து வருகின்றனர்.

    அதேபோன்று, தமிழகத்திலும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என மருத் துவமனைகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டி ருந்தது.இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார். தமிழக அரசு பதிலளிக்கஉத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    No comments: