Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, April 12, 2017

    மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

    எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக போதிய இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.


    ராமநாதபுரம் ராஜு தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் மருத்துவக் கல்லுாரிகளில் 2009--10 முதல் 2016--17 வரை எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பிற்கு 35 ஆயிரத்து 357 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. 

    இதில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் வெறும் 278 பேர்தான். இது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. இதிலிருந்து தமிழக அரசுப் பள்ளிகளின் நிலைமையை அறிய முடியும்.அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையான கல்வி மற்றும் மதிப்பெண் பெற முடியவில்லை. 

    எம்.பி.பி.எஸ்.,மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, போதிய இட ஒதுக்கீடு வழங்க, நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராஜு மனு செய்திருந்தார்.

    நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் கொண்ட அமர்வு, ’மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்குமாறு அரசுக்கு, இந்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்,’ என உத்தரவிட்டது.

    No comments: