Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, April 30, 2017

    38 மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு 'ஹால் டிக்கெட்'

    சென்னை, தர்மபுரி, வேலுார் மாவட்டங்களில் இருந்து, 38 மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக, 'நீட்' எனப்படும், தேசிய நுழைவு தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். ஆன்லைனில் ஏற்பட்ட பிரச்னையால், கட்டணத்தை செலுத்த முடியவில்லை.

    எனவே, தாங்கள் செலுத்தும் கட்டணத்தை ஏற்று, 'நீட்' தேர்வு எழுத அனுமதிக்கும்படி, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 38 மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர்.இதை விசாரித்த, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பிறப்பித்த உத்தரவு: இதே போன்ற ஒரு வழக்கில், தேர்வு கட்டணம் பெறுவதை பரிசீலிக்கும்படி, இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. 'அந்த உத்தரவு செல்லும்' என, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. விண்ணப்ப படிவம் பூர்த்தியாகும் வகையில், கட்டணத்தை ஏற்பதை 
    பரிசீலிக்க வேண்டும்.எனவே, ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட, விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை ஏற்கும்படி, சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிடப்படுகிறது. கட்டணத்தை பெற்று, 'நீட்' தேர்வு எழுத ஏதுவாக, ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி 
    உத்தரவிட்டு உள்ளார்.

    No comments: